ஏ.எல்.எம்.நபாறுடீன்,றியாஸ் ஆதம்
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் தரம் ஒன்றிற்கு புதிதாக இணைந்துள்ள மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு (21.01.2016 இன்று) பாடசாலை அதிபர் எம்.ஏ அன்சார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் பிரதம அதிதியாகவும், வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேஹ் ஏ.எல்.எம் காசீம் சிறப்பு அதிதியாகவும், விசேட அதிதிகளாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ கஸ்ஸாலி, உதவிக் கல்விப் பணிப்பாளர் யு.எம் நியாஸி மௌலவி, ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல் மன்சூர் ஆகியோருடன் பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்குளும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது தரம் ஒன்றிற்கு புதிதாக இணைந்துகொண்ட மாணவர்களுக்கு அதிதிகளினால் ஏடு துவக்கி வைக்கப்பட்டதுடன், கடந்த காலங்களில் கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களும் கொளரவிக்கப்பட்டனர். இதன்போது அல்குர்ஆனை மனனம் செய்து ஹாபிழ்களாக வெளியாகியுள்ள இப்பாடசாலை மாணவர்கள் இருவரும் அதிதிகளினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











