ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களான டாக்டர் ஹபீஸ் இராஜினாமா செய்துள்ளமையாலும்,
அமைச்சர் கே.டி.எஸ்.குணவர்த்தன மறனித்து விட்டதாலும் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்துக்கு அடுத்த இடத்தில் இருக்கும் எனக்கே தேசியப்பட்டியல் வழங்கப் படவேண்டும் என மத்தியமாகாண சபை உறுப்பினர் ஆஷாத் சாலி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளதாவது;
தேர்தலில் போட்டியிட்டிருந்தால் வெற்றிபெற்றிருப்பேன் ஆனால் போட்டியிடவேண்டாம் தேசியப்பட்டியல் வழங்கப்படும் என்று கூறப்பட்டதால் போட்டியிடாமல் தவிர்ந்து கொண்டு கட்சியின் வெற்றிக்கு வேலைசெய்தேன் எனவே எனக்கே தேசியப்பட்டியல் வழங்க வேண்டும் என்று மத்திய மாகாணசபை உறுப்பினர் அஷாத் சாலி தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
