நேற்று மாடறுப்புக் கோரிக்கை , இன்று பொதுபல சேனாவுடன் விசேட சந்திப்பு ஜனாதிபதி மைத்திரி..!

லங்கையில் செயற்பட்டு வரும் கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபல சேனாவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இந்த சந்திப்பு தொடர்பில் தனியார் தொலைக்காட்சி செய்திச் சேவையொன்றுக்குக் கருத்துத் தெரிவித்தார்.

வவுனியாவில் கடந்த அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட போகஸ்வெவ கிராமம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும் தேரர் கூறினார். இந்தக் கிராமத்தில் 4ஆயிரத்து 500 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் அந்தக் கிராமத்தை விட்டும் தமது கிராமங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளதாகவும் தாம் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக கலந்துரையாடலின் பின்னர் வெளியேறும் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் குறிப்பிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -