2018 ஆம் ஆண்டு வரை கர்ப்பம் தரிப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை..!

ல்-சல்வடோர் நாட்டில் பெண்கள் கர்ப்பம் தரிப்பதை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுளம்பினால் பரவும் நோய் நிலையொன்றினால் பிறக்கும் குழந்தைகள் , தீவிர குறைபாடுகளுடன் பிறப்பதை கருத்தில் கொண்டே அந்நாட்டு அதிகாரிகள் இவ் எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு வரை கர்ப்பமாவதை தடுக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

‘சிகா’ எனப்படும் மேற்படி வைரஸ் தொற்றால் , பிறக்கும் குழந்தைகளின் மூளை முழுதாக வளர்ச்சியடைவது தடுக்கப்படுகின்றது.

குறித்த வைரஸ் பரவுவதை அடுத்து பல தென் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகள் பலவற்றிற்கான பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரேசியல் மற்றும் கொலம்பிய ஆகியநாடுகள் இந்நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கொலம்பியாவிலும் கர்ப்பம் தரிப்பதை தவிர்க்கும் படி கோரப்பட்டுள்ளது. ஆனால் வெறும் 6-8 மாதங்களுக்கே அக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -