நிஸ்மி-
மாணவர்களின் உயர்ச்சி ஆசிரியர்களினதும், பெற்றோர்களினதும் கூட்டுப் பொறுப்பிலேயே தங்கியுள்ளது. எமது சிறார்களை நாட்டிற்கும், சமூகத்திற்கும் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் புடம் போடும் எமது முன் பள்ளி ஆசிரியர்களின் பணிக்குப் பெற்றோர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று றெயின்போ கல்லூரியின் முன் பள்ளி மாணவர்களின் விடுகை விழாவும், பரிசளிப்பு வைபமும் நேற்று (05) சனிக்கிழமை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதாஉல்லா கலையகத்தில் கல்லூரியின் பணிப்பாளர் ஏ.எஸ்.ஹஸ்பி தலைமையில் இடம் பெற்றபோது அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வெற்றி விருது, பரிசு மற்றும்;, சான்றிதழ்களையும் வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
றெயின்போ கல்லூரியின் பணிப்பாளர் ஏ.எஸ்.ஹஸ்பி தலைமையில் ரெயின் ட்ரொப் - மழைத் துளி என்ற தொனிப் பொருளில் இடம் பெற்ற இந் நிகழ்வில் ஆரம்பக் கல்விக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் என்.ரி.ஜமால்தீன், மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பாளர் ஏ.எல்.தௌபீக், பிரதேச செயலக நிதி உதவியாளர் எம்.எச்.ஜெய்னி, முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.எம்.மீராசாஹிப், ஆசிரியர் எம்.எம்.நிஸாம்,முன் பள்ளி அபிவிருத்திப் பணியகத்தின் உத்தியோகத்தர் முன் பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






