ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான வாகனத்தில் நபரொருவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி அல்லது பிரதமரால் பொலிஸாருக்கு எந்தவொரு அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என, அமைச்சர் கபீர் கசிம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினராயினும் அமைச்சராயினும் சட்டம் யாவருக்கும் பொதுவானது எனவும், இந்த சம்பவம் தொடர்பில் அவரைக் கைதுசெய்ய பொலிஸார் வசம் சாட்சிகள் இருப்பின் அதனை செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனாதிபதியோ பிரதமரோ தலையிடப் போவதில்லை எனவும் கபீர் கசிம் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கு அதனை உரிய முறையில் மேற்கொள்வதற்கான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், கடந்த ஆட்சிக் காலத்தைப் போன்று, ஹெலிக்கொப்டர் மூலம் சிங்கப்பூருக்கு அனுப்ப எம்மாலும் முடியும் ஆனால் அதனை செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
