பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து ஸ்தம்பிதம்..!

க.கிஷாந்தன்-
கினிகத்தேனை தியகல சந்தியினூடாக நோட்டன்பிரிட்ஜ் வழியாக மஸ்கெலியா பிரதேசத்திற்கு செல்லும் பிரதான வீதியில் லொனெக் தோட்ட அண்மித்த பகுதியில் பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இப்பகுதிக்கான மின்சாரம் மற்றும் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாக நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

14.12.2015 அன்று அதிகாலை 4 மணிக்கு இடம்பெற்ற இச்சம்பவத்தில் முறிந்து விழுந்த மரம் மின்சார இணைப்புகள் மீது விழுந்ததினால் மின்சார கம்பங்கள் முற்றாக பாதித்ததுடன் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பிரதான வீதியில் இம்மரம் முறிந்து விழுந்ததில் இவ்வீதியின் போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பிதமடைந்திருந்தது.

இதனையடுத்து இலங்கை மின்சார சபையினர் அவ்விடத்திற்கு விரைந்த மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர்.

எனினும் மின்சார இணைப்பினை சீர்செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -