'நாவல் ஊற்று' சஞ்சிகை வெளியீட்டு விழா..!

 ந.குகதர்சன்-
ட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தின் 55வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக 'நாவல் ஊற்று' எனும் சஞ்சிகை வெளியீட்டு விழா பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

அதிபர் எஸ்.கோபாலப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக மட்டக்களப்பு மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சோமசுந்தரம், பாடசாலையின் ஸ்தாபக ஆசிரியர்கள், பழைய அதிபர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலை மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் முகமாக அவர்களின் ஆக்கங்கள் அடங்கியதும், வித்தியாலயத்தின் வரலாறு பற்றியதுமான கோர்ப்புகள் அடங்கிய சஞ்சிகை வெளியீடப்பட்டது.

அத்தோடு 2015ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுகளைக் கௌரவித்தல், பாடசாலை ஸ்தாபகர் மற்றும் பாடசாலை ஸ்தாப ஆசிரியர்கள், பாடசாலை பழைய அதிபர்கள், ஆசிரியர்கள், கௌரவிப்பு மற்றும் சஞ்சிகை ஆசிரியர் கௌரவிப்பு போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றது.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -