ஐ.எஸ் அச்சுறுத்தல் - இலங்கையிலும் பாதுகாப்பு அதிகரிப்பு

லகம் முழுவதும் ஏற்பட்டுள்ள ஐ.எஸ் ஆயுதாரிகளின் அச்சுறுத்தல் காரணமாக, இலங்கையின் விமான நிலையம், துறைமுகங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தகவலினை பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் விசேட ஆய்வு குழு ஒன்றை நியமித்து, விமான நிலையம் மற்றும் துறைமுகம் என்பவற்றின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எஸ் ஆயுதாரிகளினால் உலகின் பல்வேறு நாடுகளில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையிலேயே இலங்கையின் முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பிரான்ஸ் தலைநகர் பரிஸில் ஐ.எஸ் ஆயுததாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் 130 பேர் வரை கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -