அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரச ஒசுசலவினை நிறுவ பிரதியமைச்சர் பைசால் நடவடிக்கை!

சுலைமான் றாபி-

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரச ஒசுசல நிறுவப்படும் என சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்தியத்துறை பிரதியமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார்.

நேற்றைய தினம் (04) கொழும்பு Grand Oriental ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை அரச மருந்தக கூட்டுத்தாபனத்தினால் வருடா வருடம் நடைபெறும் ("Dealer's Convention - 2015" ) முகவர்களை ஊக்குவித்து விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே பிரதியமைச்சரினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், சாய்ந்தமருது, சம்மாந்துறை, கல்முனை மற்றும் மருதமுனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரச ஒசுசலவினை நிறுவுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவ் விடயம் சம்பந்தமாக ஆராய அம்பாரை மாவட்டத்திற்கு அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகள் எதிர்வரும் வாரமளவில் விஜயம் செய்யவுள்ளதாகவும் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இந்த விருது வழங்குதல் நிகழ்வில் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -