அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் கௌரவிப்பு விழா (படங்கள்)

அபுஅலா,ஏல்.எம்.றமீஸ், றியாஸ் ஆதம்-

அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் பாடசாலை அபிவிருத்திக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட அர்ஹமின் 'சாதித்த மாணவர்களும், சரித்திர ஆசிரியர்களும்' கௌரவிப்பு விழா (2015.12.03 வியாழக்கிழமை ) இன்று  பாடசாலை அதிபர் எம்.ஏ அன்சார் தலைமையில பாடசாலை வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண முன்னால்  அமைச்சர் எம்.எஸ் உதுமாலெவ்வை நட்சத்திர அதிதியாகவும், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம் காசீம் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டனர்.

இதன் போது அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலய 32 மாணவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சீருடைகளை வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்களாக இருக்கின்றவர்கள் தங்களின் அபிவிருத்தி தொடர்பான திட்டங்களை சபையில் பிரரேணையாக கொண்டு சென்று எவ்வாறு உரையாற்றுகின்றார்களே அதை விடவும் எந்த கூச்சங்களின்றி தங்களின் சபை நடவடிக்கைகளை முன்னெடுத்ததை பார்க்கும்போது எவ்வளவு சந்தோஷமாவுள்ளது.

எவ்வளவு தைரியமானவர்களானாலும் அவர்கள் சபை நடவடிக்கையில் கலந்துகொண்டு பேசும்போது சிறு தடுமாற்றமடைவார்கள். அந்த தடுமாற்றங்களும் உங்களிடத்தில் காணப்படவில்லை. அந்தளவு அதிபர், ஆசிரியர் குழாமினரின் அர்ப்பணிப்பு அமைந்துள்ளதை இதன் மூலம் அறிந்துகொள்ளக் கூடியதாகவுள்ளது என்றார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அக்கரைப்பற்று கல்வி வலய பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிம், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -