உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் அன்பளிப்புக்கள் கூட இலஞ்சமாகும் - பிரதேசசெயலாளர் சலீம்

ஹாசிப் யாஸீன்-
ரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் அன்பளிப்பு பொருட்கள் கூட இலஞ்சமாகவே பார்க்கப்படுகின்றது. எனவே உத்தியோகத்தர்கள் இலஞ்சம், ஊழல் விடயங்களிலிருந்து தவிர்ந்து கொண்டு தங்களது சேவைகளை மக்களுக்கு வழங்குவதோடு தொழில்களையும் பாதுகாத்து கொள்ள வேண்டும் என சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் இலஞ்ச, ஊழலற்ற சேவையினை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு உறுதி மொழி எடுக்கும் நிகழ்வு நேற்று (09) புதன்கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே பிரதேச செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ், நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை, கணக்காளர் எம்.எம்.உசைனா, திவிநெகும முகாமையாளர்களான ஏ.சீ.ஏ.நஜீம், எஸ்.றிபாயா உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதன்போது உத்தியோகத்தர்கள் அனைவரும் இலஞ்சம், உழலுக்கு எதிராக உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -