திருகோணமலை நிலாவெளி கடற்கரையில் சடலம் மீட்பு..!

எப்.முபாரக்-
திருகோணமலை – நிலாவெளி பகுதியில் ஆண் ஒருவரின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சடலம் ஞாயிற்றுக்கிழமை (6) முற்பகல் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் இந்திய மீனவராக இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். எனினும், இந்திய மீனவர் என உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் எதுவும் கிடையாதென பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

நிலாவெளி பகுதியில் கரையொதுங்கிய சடலம், பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -