நான்கு மாணவர்களை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 52 வயதுடைய சந்தேக நபர் கைது..!

க.கிஷாந்தன்-
யகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டமொன்றில் நான்கு மாணவர்களை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 52 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை நுவரெலிய விசேட பொலிஸ் பிரிவு 03.12.2015 அன்று கைது செய்து 04.12.2015 இன்று நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சம்பவத்தை விசாரித்த நீதிபதி சந்தேக நபரை பதினான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த சந்தேக நபர் தொடர்ச்சியாக இச்சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளது.

நுவரெலியா சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இவ்வாறு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நான்கு சிறுவர்களும் நுவரெலிய அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவர்கள் நால்வரும் 13 -14 வயதுக்குட்பட்டவர்களாவர் என தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -