முன்னாள் தெங்கு கைத்தொழில் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, பாரிய மோசடி மற்றும் ஊழல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அரச வளங்கள் மற்றும் சிறப்புரிமைகளை மீறியமை தொடர்பில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, மனைவியின் பெயரில் அரச காணியை குத்தகைக்கு எடுத்து அதனை அபிவிருத்தி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு ஒன்றரை கோடி ரூபாவுக்கும் மேல் இழப்பை ஏற்படுத்தியதாக இவர் மீது எற்கனவே குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவ்வழக்குகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவே இவர் அழைக்கப்பட்டுள்ளார்.
