சுயாதின ஊடகவியலாளர் விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில்..!

எப்.முபாரக்- 
திருகோணமலை மாவட்ட சுயாதின ஊடகவியலாளரும், திருகோணமலை மாவட்டத்தின் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவருமான அப்துல் சலாம் யாசிம் புதன்கிழமை (18) இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற போது எருமை மாடுகளுடன் மோதி பலத்த காயங்களுக்குள்ளாகி மொறவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவிக்கின்றார்கள். 

மொறவெவ ரெட்டவெவவில் உள்ள அவரது விட்டிலிருந்து வேலைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சென்ற போது மொறவெவ இராணுவ பயிற்சி முகாமின் முன்னால் உள்ள வீதியில் புத த்கிழமை (18)இரவு 8.00 வீதியின் குறுக்கால் சென்ற எருமை மாடுகளுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இவ்விபத்தில் போது ஊடகவியலாளருக்கு பற்கள் உடைபட்டுள்ளதோடு வலது காலிலும் கையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஊடகவியலாளர் கொண்டு சென்ற ஊடக உபகரங்களான மடிக்கனணி செயலிழந்துள்ளதாகவும் இச்சம்பவம் பற்றிய விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -