வினாத்தாளில் குளறுபடிகள் ஆசிரியர்களும் மாணவர்களும் விசனம்..!

க.கிஷாந்தன்-
த்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் மூன்றாம் தவணை பரீட்சைக்காக தரம் 10ற்கு அச்சிட்டு வெளியிடப்பட்ட வரலாறு பாட வினாத்தாளில் குளறுபடிகள் காணபட்டுள்ளதாக ஆசிரியர்களும், மாணவர்களும் குற்றசுமத்தியுள்ளனர்.

மத்திய மாகாண கல்வி திணைக்களத்திற்குட்பட்ட பாடசாலைகளில் 18.11.2015 அன்று புதன்கிழமை இடம் பெற்ற வரலாறு பாடப்பரீட்சையின் போது மாணவர்களுக்கு வழங்கபட்ட வினாத்தாளில் குளறுபடிகள் காணபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

குறித்த வினாத்தாளில் வழங்கபட்டுள்ள அறிவுறுத்தல்கள் இவ் வினாப்பத்திரம் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளதாகவும், முதலாம் பகுதியில் முதலாவது வினாவிற்கும், இரண்டாம் பகுதியில் 05 வினாக்களுக்கும் விடையளிக்குமாறு மொத்தம் 06 வினாக்களுக்கு விடையளிக்குமாறு மாணவர்களுக்கு வழங்பட்டுள்ள வினாத்தாளில் அச்சிடப்பட்டிருந்தது.

ஆனால் மூன்றாம் பகுதியில் எவ்வித கேள்விகளும் தெரிவுசெய்யுமாறு அச்சிடப்படவில்லையெனவும் மூன்றாம் பகுதியில் 09 ஆவது வினாவில் இரண்டு உப வினாக்கள் மாத்திரம் அச்சிடப்பட்டிருந்ததோடு 10ஆவது வினா முழுமையாக அச்சிடப்படவில்லை என்று மாணவர்களும், ஆசிரியர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை வினாத்தாளில் வழங்கபட்டுள்ள அறிவுறுத்தல்களும் பிழையாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குற்றசாட்டு குறித்து மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் மேலதிக கல்விப் பணிப்பாளரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அது பயனளிக்கவில்லை.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -