செய்தியாளர்-எப்.முபாரக்
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் சட்டவிரோதமான வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேக நபர் மூன்று வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காத ஒருவரை இம்மாதம் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் இன்று புதன்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது.
கொட்பே, தீவரகம, பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த குற்றச்சாட்டு வழக்கு திருகோணமலை நீதிமன்றில் நடைபெற்று வந்த வேளையில் குறித்த சந்தேக நபர் நீதிமன்றுக்கு சமூகமளிக்காது தலைமரைவாக இருந்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை பொலிஸார் செவ்வாய்கிழமை (10) கைது செய்து திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ஹயான் மீஹககே உத்தரவு பிறப்பித்தார்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக. விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.