ஒலுவில் பாலமுனை துறைமுக வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த சரிப்தீன் சபீக் (39 வயது )என்பவர் கல்முனை வைத்தியசாலையில் மரணமானார். இவர் ஒலுவிலில் திருமணம் முடித்து ஒரு ஆண் குழந்தை உண்டு.
இன்று அதிகாலை தையல் தொழிலில் ஈடுபட்டு இருந்த இவர் தேநீர் அருந்த நண்பருடன் கடைக்குச் செல்லும் வழியில் மாட்டுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார். பின்னால் இருந்து சென்ற அவரது நண்பர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதே இடத்தில் மீண்டும் இன்று பகல் 12 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒலுவில் அல் ஜாயிஸா வித்தியாலய முன்னால் அதிபர் இஸ்மாயில் என்பவர் விபத்துக்குள்ளாகி பாலமுனை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -