மன்னார் கல்வி வலயத்தின் கீழ் இயங்கும், புத்தளம் பாடசாலை ஆசிரியர்களுக்கு விஷேட நடமாடும் சேவை !

கரீம் ஏ.மிஸ்காத்-

டம் பெயர்ந்த மாணவர்களின் நலன் கருதி, அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியால், புத்தளம் மாவட்டத்தில் 2007 ஆண்டு, ஆறு பாடசாலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. 
இவ் ஆறு பாடசாலைகளும் வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு துறை அமைச்சின் கட்டுப்பாட்டில், மன்னார் கல்வி வலயத்தின் கீழ் இயங்கிவருகின்றன. 

இப் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, வடமாகாண கல்வி ஆலோசனை சபையின் கூட்டத்தில் எடுக்கப்ட்ட தீர்மானத்திற்கமைய, வடமாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க,   மேற்குறித்த பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்களின், சுயவிபர ஆவணங்களில் உள்ள குறைபாடுகள், நியமனம் உறுதிப்படுத்தல், பதவி உயர்வு, போன்ற பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக, நடமாடும் சேவை ஒன்று இன்று (20-10-2015) புத்தளத்தில் அமைந்துள்ள, மன் /புத் / றிஷாட் பதியுதீன் மாகாவித்தியாலயத்தில்  இடம்பெற்றது. 

இவ் நடமாடும் சேவையில் 168 ஆசிரியர்கள் வருகை தந்து பயன் பெற்றனர்.மேலும் இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன், அஸ்மின் ஐயூப், ஜவ்பர் ஜனோபர் ஆகியோரும் அதிதிகலாக கலந்து கொண்டனர். 

மேலும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ. இரவீந்திரன் வடமாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் எஸ்.எஸ். செபஸ்ரியன், வடமாகாண கல்வி பணிப்பாளர் உதயகுமார், வடமாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் பிரேம் காந்தன், மன்னார் பிரதி கல்விபணிப்பாளர் ஜூனைத்,  மன்னார் கோட்டக் கல்விபணிப்பாளர் வாஸ் கூஞ்ஞை ஆகியோர் கலந்து கொண்டனர். 

தவிர்க்க முடியாததன் காரணமாக மன்னார் வலய கல்வி பணிப்பாளர் எம்.எம். சியான் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -