உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கலந்துரையாடல்..!

க.கிஷாந்தன்-
திர் வரும் பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபைகளுக்கான தேர்தல் தொடர்பாக 19.10.2015 அன்று கொட்டகலையிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் ஒன்று இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின்போது தேர்தலில் போட்டியிடுவதற்காக இளைஞர் யுவதிகள், ஆசிரியர்கள், தோட்ட உத்தியோகஸ்தர்கள், வர்த்தக பிரமுகர்கள், இ.தொ.காவின் வளர்ச்சிக்கு பாடுபட்ட உத்தியோகஸ்தர்களும், ஆதரவாளர்களையும் பிரதேச வாரியாக கமிட்டி அமைத்து நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படவேண்டுமென முடிவெடுக்கப்பட்டது.

இதன்போது பொதுச் செயலாளர் உள்ளிட்ட இ.தொ.காவின் தலைவர் முத்துசிவலிங்கம், மாகாண சபை உறுப்பினர்கள், இ.தொ.கா வின் உப தலைவர்கள், அரசியற் பிரமுகர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -