பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை எம்.எம்.நௌபல் எழுதிய கவிதைகளின் தொகுப்பான 'மிதக்கும் கனவுகள்'நூல் வெளியீட்டு நிகழ்வு (18-10-2015) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் மர்ஹூம் ஏ.எச்.எம்.மஜீட்; நினைவரங்கில் உதவிக் கல்விப் பணிப்பாளர் சத்தார் எம். பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அதிதிகளாக கலாநிதி ஏ.ஏ.முகம்மது நுபைல், கலாநிதி எம்.பி.எம்.இஸ்மாயில் கல்முனை ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்;.
இந்த 'மிதக்கும் கனவுகள்' கவிதை நூலைப் பற்றி எழுத்தாளர்களான அலறி, விஜிலி, அறநிலா, மலரா, சுல்பிகா சரீப், முரளீஸ்வரன், சோலைக்கிளி, கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் ஆகியோர் பேசினார்கள்.
முதல் பிரதியை கல்முனை பிரதேச செயலக சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் எஸ்.எம்.றபாய்டீன் பெற்றுக்கொண்டார்.
சிறப்புப் பிரதிகளை ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத், ஹென்டி கெப் சர்வதேச தொண்டு நிறுவனத்தின் மட்டக்களப்பு பிராந்தியப் பொறுப்பாளர் ஏ.ஜி.கலீலுர் றகுமான் ஆகியோரும், மர்ஹூம் ஏ.எச்.எம்.மஜீட்; நினைவுப் பிரதியை கல்முனை பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.முகர்ரப் ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் பெரும் அளவிலான இலக்கியவாதிகள் கலந்து கொண்டனர் இறக்காமத்தைச் சேர்ந்த திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.றியாஸ் பாடலொன்றைப் பாடினார்.






