ஒலுவில் கடலரிப்பைக் கட்டுப்படுத்த பாரிய வேலைத்திட்டம்..!

பைஷல் இஸ்மாயில் -
லுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுவரும் கடலரிப்பினால் குறித்த பிரதேச மக்கள் பாரிய ஆபத்தினை எதிர்நோக்கி வந்தனர். இதனை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இன்று அப்பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தி வேலைகள் இடம்பெற்றுவருகின்றன.

இதனை பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் இன்று (19) மாலை ஒலுவில் வெளிச்ச வீட்டு கடற்கரை பிரதேசத்துக்கு நேரடி விஜயத்தை மேற்கொண்டு பார்வையிட்டார். இதில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் என்.எம்.யாசிர் ஐமன் மற்றும் அப்பிரதேச பொதுமக்கள் உள்ளிட்டோர் அங்கு நிலவும் குறைபாடுகள் பற்றி கிழக்கு மாகாண சபை உறுப்பினரிடம் எடுத்துரைத்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -