26 வது தொற்றாநோய் சிகிச்சை நிகழ்வில்..!

அபுஅலா –
ட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியாலையின் 26வது தொற்றாநோய் சிகிச்சை நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை (06) வைத்தியசாலை தொற்றாநோய் பிரிவில் இடம்பெற்றது.

வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் கலந்து கொண்டார்.

இப்பிரிவில் சிகிச்சை பெறவந்தவர்களுக்கு துய பசும் பாலினை இந்நிகழ்வின் பிரதம அதிதி அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் வழங்கி வைத்தார்.

வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தொற்றாநோய் தொடர்பான சிறு விளக்கத்தினை சிகிச்சைபெற வந்தவர்களுக்கு வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தொற்றாநோய் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ரீ.எப்.நப்தா, பெண் விடுதி பொறுப்பதிகாரி டாக்டர் எப்.எப்.எஸ்.பரிவீன், வெளிநோயளர் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் ஜே.எப்.எம்.நைரோஸா மற்றும் எப்.எம்.பாஹிம்ஆகியோர் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -