எந்த சந்தர்ப்பத்திலும் சீபா (CEPA) உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்.
இலங்கை, இந்தியாவுடன் சீபா வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது.
எனினும் அதனை சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம மறுத்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா சென்று உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்ட பின்னர் மீண்டும் சீபா பற்றி பேசப்பட்டது.
ஆனால் சீபா பற்றி எந்த சந்தர்ப்பத்திலும் பேசப்படவில்லை என ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
