வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பொறுப்புடன் கருத்துக்களை வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ச, சட்ட கல்லூரியின் பரீட்சை எப்படி எழுதினார் என்பது எம் அனைவருமக்கும் தெரியும் என அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே நாமல் ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ராஜபக்சவினர் காரணமாகவே இலங்கை சர்வதேசத்திற்கு மத்தியில் தரம் தாழ்ந்து போனதாக கூறுவது தவறானது எனவும் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலங்கை சட்டக்கல்லூரியில் பீடாதிபதியின் அறைக்குள் இருந்தே பரீட்சைக்கு தோற்றியதாகவும் முன்கூட்டியே அவருக்கு வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தாகவும் கடந்த காலங்களில் குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
