அமைச்சர் ஹக்கீம் ஒலுவில் மீனவர் பிரச்சினை, கடலறிப்பு போன்றவற்றை ஆராயும் ஒலுவில் விஜயம்!

ஷபீக் ஹுஸைன், முதலமைச்சு ஊடகம்


அம்பாரை மாவட்டம் ஒலுவிலில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகத்தின் காரணமாக ஒலுவில் கரையோரம் கடலரிப்பினால் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுவரும் அவல நிலை தோன்றியுள்ளதனை பார்வையிட இன்று 12.09.2015  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குழுவினர் அங்கு நேரில் விஜையம் செய்தனர்.

குறிப்பிட்ட பயணத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், பிரதி அமைச்சர் பைஷல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான அலிஷாஹிர் மெளலானா, எம்.ஐ.எம்.மன்சூர், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்களுடன்  ஏராளமான பொதுமக்களும் இன்று அங்கு விஜையம் செய்தனர்.

குறிப்பிட்ட பிரச்சனை சம்மந்தமாக ஒலுவில் துறைமுக அதிகாரசபை சம்மந்தப்பட்ட குழுவினர் மற்றும் பிரதமர், ஜனாதிபதி ஆக்கியோருடன் முக்கிய பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கடலரிப்பு சம்மந்தமாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்டு இதுவரை நஷ்டயீடு வழங்கப்படாமல் இருக்கும் மீனவர்களுக்கு நஷ்டயீட்டினைப் அவசரமாகப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இவ்விஜையத்தின் போது அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.


மீனவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த அமைச்சர் மீன்பிடித் துறை அமைச்சருடன் கலந்துறையாடி உரிய தீர்வைப் பெற்றுத்தருவதாகவும் கூறினார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -