உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு..!

க.கிஷாந்தன்-
நுவரெலியா டொப்பேக்ஸ் காட்டுப்பகுதியில் இறந்த நிலையில் சிறுத்தையொன்று 21.09.2015 அன்று காலை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 6 வயது நிரம்பிய இந்த சிறுத்தை 3.5 அடி உயரமும் 6 அடி நீளமும் கொண்டுள்ளதாக வன ஜீவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த காட்டில் வேட்டையாட வைத்திருந்த மின் கம்பியில் சிக்குண்டு மேற்படி சிறுத்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுத்தையை மின்னேரியா கிரித்தலை பகுதியில் உள்ள வன ஜீவ அதிகாரிகளின் பயிற்சி நிலையத்திற்கு ஒப்படைக்கப்படவுள்ளதாக நுவரெலியா-ஹக்கல வன ஜீவராசிகள் திணைக்களத்தின் வன ஜீவ அதிகாரி சந்தன அபேவர்தன தெரிவித்தார்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -