பறவைகளை வேட்டையாடிய ஒருவர் பொலிஸாரால் கைது...!

எம்.எம்.ஜபீர்-
நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அன்னமலை குடியிருப்புமுனை குளத்தில் பறவைகளை வேட்டையாடிய ஒருவரை கைது செய்துள்ளதுடன், 13 பறவைகளையும் குளப் பிரதேசத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை கைப்பற்றியுள்ளதாக சவளக்கடை பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீப் தெரிவித்தார்.

சவளக்கடை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடந்து குளத்தடி பிரதேசத்திற்கு சென்ற பொலிஸார் 08 கானன், 02 சில்லுத் தாரா, 01 மணிப் புறா, 01 உண்ணி வக்கா அடங்கலாக 13 பறவைகளையும் வேட்டையாடிக் கொண்டிருந்த 15கொளனியை சேர்ந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றிய பறவைகள் மல்வத்தை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக நாளை செவ்வாய்க்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெறவுள்ளதாக சவளக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -