ஹாசிப் யாஸீன்-
கல்முனை புதிய நகர அபிவிருத்தி சம்பந்தமாக தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின்பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்தலைமையில் நேற்று (17) வியாழக்கிழமை கல்முனை முஸ்;லிம் பிரதேச செயலக கூட்டமண்டபத்தில்இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான வீ.கலையரசன், எம்.இராஜேஸ்வரன், கல்முனைபிரதேச செயலாளர்களான எம்.எச்.எம்.கனி, எல்.லவநாதன், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலிஉள்ளிட்ட கல்முனை மாநகர சபை தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், வட்டவிதாணைமார் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்முனை புதிய நகர அபிவிருத்தி சம்பந்தமாக தமிழ் மக்கள் கொண்டிருந்த அதிருப்திக்கானகாரணங்களை கேட்டறிந்து அதற்காக உத்தரவாதங்களை வழங்கியதோடு, இத்திட்டத்தினால் தமிழ் மக்கள்பாதிக்கப்படாதவாறு இரு சமூக மக்கள் பிரதிநிதிகளும் வெளிப்படையாக பேசி தீர்க்கமான முடிவுகளுக்குஎதிர்காலத்தில் வரவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.






