எம்.ரி.எம்.அஸாம்-
புதிய கல்வி ஆண்டிட்கு திஹாரிய ஹஸனியா அரபுக் கல்லூரி ஹிப்ழு மற்றும் கிதாபுப் பிரிவில் புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 2015.09.13 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
கிதாபுப் பிரிவுக்கு சேர விரும்பும் மாணவர்கள் தரம் 9 சித்தியடைந்திருப்பதோடு குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்தவராகவும், சன்மார்க்க கல்வியில் ஆசை ஆர்வம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். அத்தோடு ஹிப்ழுப் பிரிவுக்கு சேருவதாயின் 11 அல்லது 12 வயதுடையவராக இருப்பதோடு குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்தவராகவும், சன்மார்க்க கல்வியில் ஆசை ஆர்வம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
இம்மாணவர்கள் க.பெ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்குத் தயார் படுத்தப் படுவதோடு அல் ஆலிம் பரீட்சைக்கும் தயார் படுத்தப் படுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தகைமைகளையுடைய மாணவர்கள் 0332296882 - 0773735494 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாக முன் கூட்டியே தமது பெயர்களைப் பதிவு செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
நேர்முகப் பரீட்சை எதிர்வரம் 13 ஆம் திகதி,
ஞாயிற்க்கிமை காலை 9 மணிக்கு,
இல 500 B/1 மின்ஹத் மாவத்தை,
திகாரியவில் அமைந்துள்ள ஹஸனியா அரபுக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
