மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் நீராடச் சென்ற யுவதி நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

க.கிஷாந்தன்-

நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் யுவதி ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

06.09.2015 இன்று காலை 8.30 மணியளவில் சம்மந்தப்பட்ட யுவதி குளிப்பதற்காக நீர்தேக்கத்திற்கு சென்றுள்ளார்.

குளித்துக்கொண்டிருக்கும் வேளையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறு உயிரிழந்த யுவதி மஸ்கெலியா அப்கட் பிரதான வீதியில் அம்மன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள பிரதேசத்தை சேர்ந்த ரத்னவேல் ஞானேஸ்வரி (29 வயது) யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அப்பிரதேச மக்கள் மேற்படி யுவதி தவறி விழுந்ததை கண்டுள்ளனர். அதன் பின் இச்சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களின் உதவியோடு காலை 9.30 மணியளவில் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் மஸ்கெலியா வைத்தியசாலையில் பிரதே அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -