அக்கரப்பத்தனையில் 50 அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்து விபத்து..!

க.கிஷாந்தன்-

க்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை ஆகுரோவா தோட்ட பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து 20.09.2015 இன்று காலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி பஸ் டயகம தலவாக்கலை பிரதான வீதியில் அக்கரப்பத்தனையிலிருந்து மெராயா பகுதியை நோக்கி செல்லும் போது அக்கரப்பத்தனை ஆகுரோவா பிரதேச பகுதியில் வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேற்படி பஸ்ஸில் பயணிகள் பயணித்திருக்கவில்லை எனவும் பஸ் திருத்தப்பணிகளுக்காக சென்ற போது எதிரே வந்த வாகனத்திற்கு இடமளித்ததால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியும், நடத்துனரும் பாய்ந்து உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -