போட்டியிட்ட அனைத்து பிக்குகளும் தோல்வி...!

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 150 பிக்குகளில் ஒருவரேனும் தெரிவாகவில்லை.

புதிய நாடாளுமன்றிற்கு பிரவேசிக்க பிக்குகளுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
புதிய நாடாளுமன்றில் பத்து ஆசனங்களைப் பெற்றுக்கொள்வோம் என போட்டியிட்ட பொதுபல பெரமுன கட்சியினால் கூட ஓரு ஆசனத்தை வென்றெடுக்க முடியவில்லை.

ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியலில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அதுரலிய ரதன தேரர் மற்றும் ஒமல்பே சோபித தேரர் ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எனினும், அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பெயரிடப்படுவார்களா என்பதில் சந்தேகம் நிலவி வருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -