தேசிய அரசாங்கம் குறித்த சிந்தனை மாகாண சபைகளுக்குள்ளும் நடைமுறைப்படுத்த புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் முதலமைச்சராகவுள்ள மாகாண சபைகளின் ஆட்சியைக் கவிழ்த்து புதிய ஆட்சி மாற்றம் செய்வதனைவிட அம்மாகாணங்களின் அமைச்சுப்பதவிகளை பகிர்ந்து அரசாங்கத்தைப் பலப்படுத்துவது சிறந்தது என அந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசாங்கத்துக்கு ஒத்துழைக்க இதன் மூலம் முடியுமாகும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் இது குறித்து விரிவாக கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அப்பிரேரணையில் மேலும் கூறப்பட்டுள்ளது. (மு)
