*அடாவடி தன அரசியல் முற்று முழுதாக கல்குடாவில் இல்லாமல் ஒழிக்கனும்
*பழிவாங்கும் அரசியல் இல்லாமல் போகனும்....
*பிரதேச வாதம் இல்லாமல் போகனும்.....
*மிகவும் முக்கிய விடயம் பெண்களுக்கான பிரத்தியோக வைத்தியசாலை இதற்கான முதல்கட்ட நடவடிக்கை....இது தொடர்பாக இது வரைக்கும் ஏதும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.....
*காலம் காலமாக இருந்து வருகின்ற காணி பிரச்சனை....தீர்க்கப்பட வேண்டும்....
*எமது பிரதேச வாழ்மக்களின் ஜீவனோபாய தொழில் விவசாயம்,மீன்பிடி,மற்றும் காட்டு தொழில் சம்மந்தமான பிரச்சினைகள் தீர்க்க பட வேண்டும்...இதற்கு உதாரணமாக காவத்தமுனை பிரச்சினையை குறிப்பிடலாம்....
*எமது கலாச்சார சீர்கேடான மதுபாவனையை அடியோடு இல்லாமல் ஒழிக்க வேண்டும்...
*வருமை கோட்டின் கீழ் இருக்கும் மக்களுக்காக உதவ வேண்டும்...உதாரணம் 2005 ஆண்டு காலப்பகுதியில் மீராவோடை பகுதியில் ஒரு பெண்ணின் மரணம்....இது போன்று வருமையில் மக்கள் இப்போதும் இருக்கின்ரார்கள்.....அவர்களுக்கான தீர்வு.....
*எமது ஊரில் வருமையில் வாடும் பெண்களின் திருமணத்துக்கான ஏற்பாடு.....இதனால் எமது ஊரில் பெருகி வரும் விபச்சாரத்தை தடுக்க முடியும்...
*இளைஞர்களை அடியாட்களாக மாற்றும் அரசியல் இல்லாமல் போக வேண்டும்.உதாரணமாக கடந் முறை தேர்தலில் எமது முஸ்லிம் சகோதரர்களின் வீடுகள் உடைக்க பட்டமை.....
இன்னும் நிறைய விடயங்களை என்னாலும் உங்களாலும் தெரிவிக்க முடியும்...
இதனை ஒரு சிறந்த அரசியல் வாதியால்தான் தீர்க முடியும்...
ஆகவேதான் உங்களுடைய பாராளு மன்ற கனவு யாருக்கு நனவாக்கப் பட்டாலும் முதல் கட்டமாக இவைகளை கண்ணும் கருத்துமாக செய்து கொடுக்க வேண்டும் என்று கல் குடா வாழ் பொது நலன் விரும்பி என்ற வகையில் தயவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் இதுவே கல்குடா வாழ் முஸ்லிம்களின் இரங்களும் ஆகும்
(பொது நலன் விரும்பி எம்.ஆர்.எம்.சர்ஜீன்)