மூவர் அமைச்சராக சத்தியப்பிரமாணம்...!

வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட மூன்று அமைச்சுப் பதவிகளுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். 

புதிய அரசாங்கத்தின் நீதி அமைச்சராக விஜயதாச ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளார். புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சராக டி.எம். சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மங்கள சமரவீர மற்றும் விஜயதாச ஆகியோர் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் முறையே மாத்தறை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள்.டி.எம். சுவாமிநாதன் தேசியப் பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -