ரணில் உருவாக்கிய புஞ்சி பிரேமதாசா போன்று முஜிப் ரஹ்மான் - இம்தியாஸ் பாக்கீா்

அஸ்ரப் ஏ சமத்-

கொழும்பு மத்தியதொகுதியில் ரணில் உருவாக்கிய புஞ்சி பிரேமதாசா போன்று முஜிப் ரஹ்மானை நாம் முஸ்லீம்களின் பிரநிதியாக நாம் தோ்ந்தொடுத்து அவரை இம்முறை பாராளுமன்ற உறுப்பிணராக அனுப்ப வேண்டும் என. இம்முறை தேசிய பட்டியல் எம்பியும் முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீா் மாா்க்காா் தெரிவித்தாா்.

நேற்று இரவு(27) திகதி - வெள்ளவத்தை மெரைன் ரைவ் கோட்டலில் கொழும்பு இளைஞா் கூட்டமைப்பு என்ற அமைப்பு முஜிபு ரஹ்மானுக்கான ஆதரவும், கொழும்பு வாழ் முஸ்லீம்களது கல்வி, வீடமைப்பு, தொழில் வாழ்வாதார பற்றிய கலந்துரையாடல் சட்டத்தரனி யு.எம். மா்சூக் தலைமையில் நடைபெற்றது. இதில் கொழும்பு வாழ் புத்திஜீவிகள் வா்த்தகா்கள், இளைஜா்களும் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனா்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கல்வியமைச்சரும் சீனா நாட்டுக்கு புதிய துாதுவருமாக நியமிக்கப்பட்ட கலாநிதி கருனாசேன கொடித்துவக்கு, கலந்து கொண்டாா்.
முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீா் மாா்காா், முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவா் என். எம். அமீன் ஆகீயோா்களும் இங்கு உரையாற்றினாா்கள்.

இஙகு உரையாற்றிய காலநிதி கருனாசேன கொடித்துவக்கு“

முஜிப் ஒரு துடிப்பான வா் அவா் எப்பகுதியிலும் என்ன தீங்குகள் அநீதிகள் கட்சிக்கு எதிராக ஏதேனும் நடைபெற்றால்
கொழும்பு மத்தியில் உள்ள ஆதரவாளா்களைக் கொண்டு ஆர்ப்பாட்டமும் மற்றும் உலகுக்கும் குரல் கொடுக்கக் கூடியவா். 
கடந்த 6 வருடங்களாக கொழும்பு மத்திய தொகுதிக்கு ஒரு முஸ்லீம் பாராளுமன்றத்தை நாம் இழந்ததிருந்ததோம் இங்கு கலீல், ஹலீம் இசாக், ஜாபீரே காதா், ஆர் .பிரேமதாச போன்ற பலா். பாராளுமன்றத்ததை பிரநிதித்துவப்படுத்தினாா்கள். 
அதனை நீங்கள் இம்முறை முஜீபை கொண்டு நிவா்த்தி செய்ய வேண்டும். முஸ்லீம்களின் கல்வி நிலை மை மிகவும் பின்தங்கிய மாவட்டமாக கொழும்பு இருந்து வருகின்றது. நான் கல்விய மைச்சராக இருக்கும்போது கொலநாவையில் முஸ்லீம்களுக்கென பாடசாலையை நிறுவ முற்பட்டபோது அப்போதைய ஜக்கிய மக்கள் சுதந்தி முன்னணியின் மேல் மாகண முதலமைச்சா் ரெஜிநோல் குரே அதனை தடுத்து நிறுத்தினாா் .
அவரின அனுமதி இல்லாமால் நான் எந்த மாகண பாடசாலைக்கும் போகமுடியாது வாறு சுற்றறிக்கை கல்விய அதிகாரிகளுக்கு அனுப்பியிருந்தாா். என முன்னால் கல்வியமைச்சாரும் சீனாவுக்கான துாதுவருமான நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி கருனனா சேன கொடித் துவக்கு தெரிவித்தாாா்.

முஜீபு ரஹ்மான் - உரையாற்றுகையில் 

கொழும்பில் க.பொ. த சாதார இம்முறை சித்தியடைந்தவாக்ள 5 விதமே. மேல் மாகாணத்தில் 39 கல்வி வலயங்களுள் கொழும்பு மத்திய கல்விய வலயம் 36 வது பின்தங்கிய நிலையில் கடந்த ஆண்டுடின் க.பொ. சாதரண தரததின் சித்தியில் உள்ளது. 
வருடா வருடம் 1000 மேறபட்ட மாணவா்களுக்கு வருடா வருடம் பாடசாலை முதலாம் தர அனுமதி கிடைப்பதில்லை. சர்வதேச பாடசாலை நோக்கிச் செல்கின்றனா். தெமட்டக் கொடையில் வீதியில் மட்டும் 20 சர்வதேச பாடசாலைகள் உள்ளது. இதனை வியாபாரமாக்க கொண்டு நடத்துகின்றனா். 
கொலநாவையில் 15 சர்வதேச பாடசாலைகள் இருக்கின்றது. மாதாந்தம் 15ஆயிரம் அறவிடுகின்றனா். பின்னா் பனம் கட்ட தாய்மாா் முடியாமல் அரச பாடசாலை களில் அனுமதி கேட்டு அரசியல் வாதிகளிடம் செல்கின்றனா். பெற்றோா்கள் தமிழ்மொழி முலம் பேசுவது பழகுவது ஆனால் சிங்கள மொழி முலம் தமது பிள்ளைகளை சோக்கின்றனா். இதனால் பிள்ளைக்கு ஒரு மொழியும் தெரியாது. இதனால் 5.6.10ஆம் ஆண்டுடன் பாடசாலைக் கல்வியை இடை நடுவில் நிறுத்தி விடுகின்றனா்

இப்பவும் நீங்கள் மருதானைக்கு சென்றால் அங்கு ஒரு இடத்தில் சாரய (மது) வாா் ஒன்று இருக்கின்றது. அந்தக் கட்டிடத்திற்கு மேல் முஸ்லீம் பிள்ளைகள் செல்லக் கூடிய சர்வதேச பாடசாலை ஒன்றும் இயங்குகின்றது. இது தான் கொழும்பு வாழ் மக்களின் நிலை. கடந்த ஜனாதிபதிகள் சந்திரிக்கா தொட்டு மஹிந்த வரை இந்த மக்களுக்கு எவ்வித அபிவிருத்தியையும் செய்யவில்லை. மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் யுகத்திற்கு ப் பிறகு இந்த மக்களை கோட்டாபாய கொழும்பை அழகுபடுத்தல் என்ற காரண்த்தைக் காட்டி மக்களது பொருளாதாரம் வாழ்வாதாரம் வீடமைப்புக்களை அப்புறப்படுத்தினாா்.

அங்கு குழுமியிருந்த சிலா் முஜிபு தமது பண தோ்தல் பணிக்கு அர்ப்பணிப்பதாகவும் உறுதியளித்தனா்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -