வீனான இவ்வுலகில் வீர
நடை போட்டு வீனாக நீ!
வாழ்ந்தது போதும் மனிதா!
மண்ணறையில் உன் மகிழ்ச்சிக்கு
நன்மைகள் நமதாக்கிடும்
ரமழான் மாதமிது மனிதா!
உலகிலே நீ இட்ட உரமே
உதறிடும் உன்னை ஒரு
காலம் மறந்திடாதே! மனிதா!
மண்ணறையில் உன்னை
வரவேற்கும் நமதாக்கிடும்
உன் நன்மைகளே! மனிதா!
தூர ஓடும் உன் உறவுகள்
ஒரு நன்மைக்கு மனிதா!
மீசானில் நீ மீள்ச்சி பெற
கதறியழும் காலம் உன்னை
காத்திருக்கு மனிதா!
நீ நன்மைகள் நமதாக்கும்
ரமழான் மாதமிது மனிதா!
நீ செய்த வீன் விரையம்
உனக்கு நிலைக்காது மனிதா!
சக்காத் ,சதக்கா நீ அழித்து
நிலையான நன்மையை
நமதாக்கும் மாதமிது மனிதா!
மறுமையை மறந்து பாவத்தில்
புதைந்து போன மனிதா!
கட்டாய கடமையை செய்து
நிலையான பாவத்தை நீக்கும்
புனித நோன்பு மாதமிது மனிதா!
சொர்க்கத்தின் றையான் வழி
திறக்கும் பர்ழான நோன்பு
மாதமிது மனிதா!
படைத்தவன் பரிகாரம் தர
பரிந்துரைத்த மாதமிது மனிதா!
உன் பாவத்திற்கு பரிகாரம் தேட
நீ மறந்திடாதே! மனிதா!
அக்கரை ஊர் கவிஞன்
ஏ.எச்.ஜுனைதீன்
அட்டாளைச்சேனை