நன்மைகள் நமதாக்கும் காலம்.... கவிதை!


வீனான இவ்வுலகில் வீர
நடை போட்டு வீனாக நீ!
வாழ்ந்தது போதும் மனிதா!
மண்ணறையில் உன் மகிழ்ச்சிக்கு
நன்மைகள் நமதாக்கிடும்
ரமழான் மாதமிது மனிதா!

உலகிலே நீ இட்ட உரமே
உதறிடும் உன்னை ஒரு
காலம் மறந்திடாதே! மனிதா!
மண்ணறையில் உன்னை
வரவேற்கும் நமதாக்கிடும்
உன் நன்மைகளே! மனிதா!

தூர ஓடும் உன் உறவுகள்
ஒரு நன்மைக்கு மனிதா!
மீசானில் நீ மீள்ச்சி பெற
கதறியழும் காலம் உன்னை
காத்திருக்கு மனிதா!
நீ நன்மைகள் நமதாக்கும்
ரமழான் மாதமிது மனிதா!

நீ செய்த வீன் விரையம்
உனக்கு நிலைக்காது மனிதா!
சக்காத் ,சதக்கா நீ அழித்து
நிலையான நன்மையை
நமதாக்கும் மாதமிது மனிதா!

மறுமையை மறந்து பாவத்தில்
புதைந்து போன மனிதா!
கட்டாய கடமையை செய்து
நிலையான பாவத்தை நீக்கும்
புனித நோன்பு மாதமிது மனிதா!

சொர்க்கத்தின் றையான் வழி
திறக்கும் பர்ழான நோன்பு
மாதமிது மனிதா!
படைத்தவன் பரிகாரம் தர
பரிந்துரைத்த மாதமிது மனிதா!
உன் பாவத்திற்கு பரிகாரம் தேட
நீ மறந்திடாதே! மனிதா!

அக்கரை ஊர் கவிஞன்
ஏ.எச்.ஜுனைதீன்
அட்டாளைச்சேனை

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -