கடந்த பல வருடங்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எமது பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் முஸ்லிம் மக்களுடைய உரிமைப் போராட்டம் என்பவற்றை பேச்சளவில் மாத்திரம் கொண்டிருக்கின்றது.என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை வேட்பாளர் அன்வர் எம் முஸ்தபா தெரிவித்தார்.
மருதமுனையில் திங்கள் கிழமை (20-07-2015)காலை நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது :- இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமைத்துவத்தை பொறுத்தவரையில் அவர் பேச்சிலும், செயற்பாட்டிலும்; செயற் திறன்மிக்கவராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
அம்பாறை மாவட்டத்தில் களமிறக்கப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களும் கடந்த காலங்களில் அவர்களின் செயற்பாடுகளை மக்கள் முன்கொண்டு சென்றிருக்கின்றார்கள்.அந்த வகையிலே மக்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்கள் மீது வகையிலே மக்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது.
ஆகையால் அம்பாறை மாவட்டத்தில் மக்களுடைய ஆதரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸிக்கு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
