மலையகத்தில் 400 குடும்பங்களுக்கான வீடமைப்புக்கள் மிக விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும்!

க.கிஷாந்தன்-

200 வருடம் பெருந்தோட்ட பகுதியில் நாட்டின் தேசிய வருமானத்திற்காக உழைத்து லயக்குடியிருப்பில் வாழ்ந்த மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிரிசேனவினால் முன்னெடுக்க 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் திகாம்பரத்தின் வேண்டுக்கோளுக்கினங்க இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட 400 குடும்பங்களுக்கான வீடமைப்புகள் நிர்மாணிக்கப்பட்டு முடிவுபெறும் தருவாயில் இருப்பதோடு மிகவிரைவில் சம்மந்தப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு சகல வசதிகளையும் கொண்ட 7 பேர்ச் நிலப்பரப்பில் பாதிக்கப்பட்ட மக்களிடம் எவ்வித பணமும் அறவிடாமல் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளன.

குறிப்பாக 12 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படுகின்ற ஒரு வீட்டில் சமயலறை, விராந்தை, 2 படுக்கையறைகள், குளியலறை, மலசலகூடம் போன்ற உட்கட்டமைப்பு வசதியுடன் வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -