எம்.எம்.ஜபீர்-
புகைத்தல் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சவளக்கடை வீரத்திடல் அல்-ஹிதாய மகா வித்தியால மாணவர்களும், சவளக்கடை பொலிஸாரும் இணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு ஊர்வலம் அல்-ஹிதாய மகா வித்தியால அதிபர் வீ.எம்.பதுவுத்தீன் தலைமையில் இன்று (28) நடைபெற்றது.
பாடசாலை மாணவர்களினால் கிராமப்புர மக்களுக்கு புகைப்பது தன்னைத்தாண தூக்கில் இடுவதுபோல, புகைத்தல் குடும்ப உறவுக்கு பகை, போதையற்ற ஒழக்கமுள்ள நாட்டை உருவாக்குவோம், புகைத்தல் ஆபத்தானது என பல்வேறு சுலோகங்களை ஏந்தி மக்களுக்கு விழிப்புட்டல் நடைவடிக்கiயில் ஈடுபட்டனர்.
இதன்போது மாணவர்கள், ஆசிரியர்கள், சவளக்கடை பொலிஸ் உத்தியோகத்தர்கள் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.