நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சி மத்திய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சிகளின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்ட இப்பிரச்சாரக் கூட்டத்திற்கு NFGGயின் பிராந்திய செயற்குழு உறுப்பினர் மௌலவி MM.உவைஸ் (பலாஹி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 5ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் சிப்லி பாறூக், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி), NFGGயின் தலைமைத்துவசபை உறுப்பினர் மௌலவி முஹம்மது றிஸ்மி, ஐ.தே.கவின் காத்தான்குடி அமைப்பாளர் HMM.முஸ்தபா, ஐ.தே.கவின் காத்தான்குடி செயற்குழு உறுப்பினர் புவி MI.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் உரையாற்றினார்கள்.