வேட்புமனு நாளை முதல் ஆரம்பம்..!

திர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.  இதன்படி எதிர்வரும் 13ம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

இதேவேளை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளின் வேட்புமனுக்களை தயார் செய்யும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யத் தயாராக உள்ளன. 

அத்துடன் நாளை முதல் தேர்தல் இடம்பெற்று ஒரு வாரம் வரை எந்தவொரு பேரணியையும் மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும் வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் நிறைவடையும் நாளன்று வாகனங்களில் பேரணியாக செல்வது தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -