நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில்; மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக களமிறங்க தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.
இது தொடர்பான தீர்க்கமான முடிவை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமே வழங்குவாரெனவும் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக களமிறங்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.
எனினும், கிழக்கு மாகாண சபையின் தற்போதுள்ள நிலையை கருத்திற்கொண்டே தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் முடிவெடுக்கப்படும்.
மேலும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் கட்சியின் தலைவரே தீர்மானிப்பார்.
எனவே, இது தொடர்பான தீர்க்கமான முடிவை எதிர்வரும் 6ஆம் திகதிக்கு பின்னர் அறிவிப்பதாக அவர் தெரிவித்தார்.