முதன்மை வேட்பாளராக முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் : 6ஆம் திகதி அறிவிப்பு

டைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில்; மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக களமிறங்க தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.

இது தொடர்பான தீர்க்கமான முடிவை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமே வழங்குவாரெனவும் தெரிவித்தார். 

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக களமிறங்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.

எனினும், கிழக்கு மாகாண சபையின் தற்போதுள்ள நிலையை கருத்திற்கொண்டே தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் முடிவெடுக்கப்படும். 

மேலும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் கட்சியின் தலைவரே தீர்மானிப்பார். 

எனவே, இது தொடர்பான தீர்க்கமான முடிவை எதிர்வரும் 6ஆம் திகதிக்கு பின்னர் அறிவிப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -