குருநாகல் கெட்டுவான வீதியில் அமைந்துள்ள மாநர முதல்வர் காமினி பேரமுனகேவுடைய இல்லம் மற்றும் அவர் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் மற்றும் தம்புள்ள வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் நபருடைய ஒரு சில்லறைக் கடை மற்றும் வௌகெதரவிலுள்ள வீடு ஒன்றும் நள்ளிரவு 12 .30 மணி அளவில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
வெளிநாடு சென்று இருந்த முதல்வர் அன்றைய தினம் தான் வீடு திருமியிருந்தார். இனந்தெரரியாக நபர்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த போது அக்கம் பக்கத்திலிருந்து எழுந்து வந்ததால் இந்தக் குழுவினர் தலைமறைவாகி விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை முதல்வரின் இல்லத்திலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள முஸ்லிம் நபருடைய சில்லறைக் கடையை முற்றாச் சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளனர். அத்துடன் வௌகெதரவிலுள்ள வீடொன்றுக்கும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இக்பால் அலி
(குருநாகல் பிரதான நிருபர்)
