நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்களின் இடமாற்றம்: நீர்வழங்கல் அதிகார சபை வாபஸ்!

பிராந்திய நீர்வழங்கல் காரியாலத்துக்குட்பட்ட பிரதேசங்களில் கடமையாற்றி வந்த ஊழியர்கள் எட்டுபேருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை தேசிய நீர்வழங்கல் அதிகார சபை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர சேவா சங்கம் நேற்று (04) தெரிவித்துள்ளது.

தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் அக்கரைப்பற்றுக் காரியாலயத்தில் சேவையாற்றி வந்த 08 ஊழியர்கள் அரசியல் பழிவாங்கலுக்குட்பட்டு வெளிமாகாணங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்திருந்தனர்.

இதனையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திர சேவா சங்கத்தினால் இவ் இடமாற்றம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்விடமாற்றத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் சட்ட ஆலோசகரினால் உறுதியளிக்கப்பட்டது

நிஸ்மி கபூர்
 அக்கரைப்பற்று பிரதான நிருபர்-
சிலர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -