நிந்தவூர் 4ம் பிரிவு கமு-அல்-அதான் வித்தியாலயத்துக்கு முன்பாக செல்லும் வீதி வடிகான் அண்மையில் புணரமைக்கப்பட்டு குறிகிய காலங்களுக்குள் அவ்வடிகான்களின் மூடிகள் உடைந்து கிடப்பதனால் அவ்வீதியினூடாக மக்கள் போக்குவரத்து செய்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி அவ்வடிகான் உடைந்துள்ள இடத்திலேயே கமு-அல்-அதான் வித்தியாலத்தின் நுழை வாசல் இருப்பதனால் பள்ளி மாணவர்கள் பாடசாலைக்குள் நுழைவதிலும் கடும் சிரமத்தை எதிர்நோக்கவேண்டியுள்ளன.
மேலும் அவ்வடிகான் மூடிகள் பாடசாலைக்கு முன்பே உடைந்கிடப்பதினால் பாடசாலை மாணவர்களை ஏற்றிவரும் வாகனகங்கள்கூட கடும் சிரமத்துக்கு மத்தில் மாணவர்களை எற்றிச்செல்லவேண்டியுள்ளன.
ஆகையால் நிந்தவூர் பிரதேச சபை இதை உங்கள கவனத்தில் எடுத்துக்கொண்டு இவ்வுடைந்த வடிகான் மூடிகளை உடனே புணரமைத்து கொடுக்குமாறு மக்கள் சார்பாக தாழ்வுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

