எம்.வை.அமீர்-
நாடு முழுவதும் இம்மாதம் 23முதல் 29வரை தேசிய விடமைப்பு தின நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இன்றையதின நிகழ்வாக தேசிய விடமைப்பு கல்முனை நகர காரியாலயத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான பேச்சு,கட்டுரை மற்றும் சித்திரப்போட்டிகள் இடம்பெற்றன. தெரிவுசெய்யப்பட்ட மானவர்களுக்கிடேயே இடம்பெற்ற நிகழ்வுகள், தேசிய விடமைப்பு கல்முனை நகர காரியாலய சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.ஏ.ஹமீட் அவர்களது வழிகாட்டலில் முகாமையாளர் ஏ.ஏ.அஸீஸ் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் இடம்பெற்ற 27 ம் நாள் மேற்படி நிகழ்வில் முகாமையாளர்களான ஏ.எம்.இப்ராஹீம்,ஏ.ஏ.மஜீட் போன்றோரும் விடமைப்பு கல்முனை நகர காரியாலயத்தின் கணக்காளர் ஊடகவியாலாளர் எஸ்.ரீ.றோசான், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எஸ்.ஏ.றஹீம், மற்றும் நத்துப் வாரி போன்றோரும் மத்தியஸ்த்தர்களும் கிராம உத்தியோகத்தர் எம்.என்.எம்.சஜா அவர்களும் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கிடையே பேச்சு,கட்டுரை மற்றும் சித்திரப்போட்டிகள் நடாத்தப்பட்டு மத்தியஸ்த்தர்களால் அதே இடத்தில் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்பட்டு பரிசில்கள வழங்கப்பட்டதுடன் எனையா மாணவர்களுக்கும் சான்றிதள்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.





