சிங்­கள வாக்­கு­க­ளினால் ஆட்­சி­பீ­ட­மே­றுவோம் - அகில விராஜ் காரி­ய­வசம்


ர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தத்­தி­னூ­டாக பாரா­ளு­மன்­றத்தின் ஆச­னங்­களின் எண்­ணிக்கை 225 ஆக திருத்தம் செய்­த­மை­யினால் சிறுப்­பான்மை இன கட்­சி­க­ளுக்கோ அல்­லது சிறிய அர­சியல் கட்­சி­க­ளுக்கோ எந்­த­வொரு பாதிப்பும் ஏற்­ப­ட­போ­வ­தில்லை என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஊட­கப்­பேச்­சா­ளரும் கல்வி அமைச்­ச­ரு­மான அகில விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.

இம்­முறை பாரா­ளு­மன்ற தேர்­தலின் போது தமிழ், முஸ்லிம் வாக்­கு­க­ளோடு மாத்­தி­ர­மின்றி சிங்­கள வாக்­கு­க­ளினால் ஆட்­சி­பீ­ட­மே­றுவோம். இருப்­பினும் தேர்­தலின் பின்பும் தேசிய அர­சாங்­கமே கட்­டி­யெ­ழுப்­பப்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.அங்கு கல்வி அமைச்சர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஜன­வரி 8 ஆம் திகதி ஏற்­பட்ட ஆட்­சி­மாற்­றத்தின் பின்பு 100 நாட்­களில் எந்­த­வொரு அர­சாங்கம் செய்­யாத சேவை­களை நாம் நிறை­வேற்­றினோம்.

எனினும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டங்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­காது தொடர்ந்தும் சதித்­திட்­டங்­களை எதிர்க்­கட்­சி­யினர் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இதன்­கா­ர­ண­மாக நாட்டின் பொரு­ளா­தாரம் பெரு­ம­ளவில் சீர்­கு­லைந்­துள்­ளது.

பாரா­ளு­மன்­றத்தில் அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தச்­சட்டம் நிறை­வேற்­றப்­பட்ட பின்னர் தேர்தல் நடத்­தப்­படும். முதலில் பாரா­ளு­மன்ற தேர்­தலே நடத்­தப்­படும்.
இந்­நி­லையில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு நாட்­டி­லுள்ள சிங்­கள பௌத்த வாக்­குகள் கிடைப்­ப­தில்லை என்றும் தமிழ், முஸ்லிம் வாக்­கு­க­ளி­னா­லேயே கட்சி நிலைத்து நிற்­ப­தாக எதிர்­க்கட்­சி­க­ளினால் நீண்­ட­கா­லங்­க­ளாக பர­வா­லாக கிண்டல் அடிக்­கப்­பட்டு வந்­தது.

இருந்­த­போ­திலும் அடுத்த பாரா­ளு­மன்ற தேர்­தலின் போது தமிழ், முஸ்லிம் வாக்­கு­களை கொண்டு மாத்­தி­ர­மின்றி பௌத்த சிங்­கள வாக்­கு­க­ளினால் மாபெரும் வெற்றி பெறுவோம்.
அத்­தோடு நாட்டின் மூவின மக்­களின் பேரா­த­ர­வுடன் 125 ஆச­னங்­களை பெற்று ஐக்­கிய தேசியக் கட்சி யுகத்­தினை ஏற்­ப­டுத்­தியே தீருவோம். அதில் எவ்­வித சந்­தே­க­மு­மில்லை. சுமார் 12 வரு­டங்­க­ளுக்கு மேலாக நாம் எதிர்க்­கட்­சியில் அமர்ந்து பல்­வேறு துன்­பங்­களை அனு­ப­வித்­துள்ளோம். எமக்கு எதி­ரா­கவும் வீண் பழி சுமத்­தப்­பட்­டது. பல்­வேறு துறை­க­ளிலும் அடி­பட்டும் உதை­பட்டும் வந்த பின்­னரே ஆட்­சி ­பீடம் எனும் ஆச­னத்தை கைப்­பற்­றினோம்.

20 ஆவது திருத்­தச்­சட்டம்

இதே­வேளை நேற்றுமுன்தினம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இடம்­பெற்ற விசேட அமைச்­ச­ர­வையின் போது அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தச்­சட்டம் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது. இதன்­போது பல்­வேறு திருத்­தங்கள் முன்­வைக்­கப்­பட்­டன.

இதன்­பி­ர­காரம் 255 ஆக பாரா­ளு­மன்­றத்தின் உறுப்­பினர் தொகையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்­கைக்கு மாறாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் முன்­வைக்­கப்­பட்ட யோசனை ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது.

இதன்­பி­ர­காரம் பாரா­ளு­மன்­றத்தின் உறுப்­பினர் தொகை 225 ஆக தொடர்ந்தும் காணப்­படும். இந்த கூட்­டத்­தொ­டரின் போது அமைச்­சர்­க­ளான பி.திகாம்­பரம், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதி­யுதீன் ஆகியோர் பல்­வேறு கருத்­துக்­களை முன்­வைத்­தனர்.

எனினும் அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தத்தில் ஆச­னங்­களின் எண்­ணிக்கை குறைக்­கப்­பட்­டமை ஊடாக சிறு­பான்மை இன கட்­சி­க­ளுக்கோ அல்­லது சிறிய கட்­சி­க­ளுக்கோ எந்­த­வொரு பாதிப்பும் ஏற்­ப­ட­ப்போ­வ­தில்லை. அதற்­கான வழி­கள் குறித்த திருத்­தத்தில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

அத்­தோடு ஜனா­தி­ப­தியும் சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டாத வகையில் தேர்தல் முறை­மையில் மாற்றம் செய்ய வேண்டும் என கோரி­யுள்ளார்.
இந்­நி­லையில் தேர்தல் முறைமை மாற்றம் குறித்­தான இறுதி முடிவுகளை எல்லை நிர்ணய ஆணைக்குழு முன்வைக்கும். இதன்பிரகாரம் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் விரைவில் பாராளு மன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும் பழைய முறைமையின் பிரகாரமே தேர்தல் நடத்தப்படும்.அரசியலமைப்பின் 20 ஆவது திருத் தச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு போதும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப் பினை வெளியிடாது. புதிய தேர்தல் முறை மைக்கு நாம் முழுமையான ஆதரவினை நல்குவோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -